2025 ஜூலை 12, சனிக்கிழமை

நாட்டினுள் அமைதியைப் பேணுமாறு தூதுவர்கள் கோரிக்கை

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (29) பிற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய பிரதமர் ஒருவரைத் தெரிவுசெய்யும் தீர்மானத்துக்கு காரணமாக அமைந்த முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைக்குரிய நிலைமைகளை, இதன்போது ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.

அங்கு கருத்துத் தெரிவித்த வெளிநாட்டுத் தூதுவர்கள், நாட்டின் அரசமைப்புக்கேற்ப, நாட்டினுள் அமைதியைப் பேணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

நாட்டின் அரசமைப்புக்கேற்ப, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமையவே, தான் பிரதமரை நியமித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அரசாங்கம் என்றவகையில், அணிசேரா கொள்கைக்கேற்ப அனைத்து நாடுகளுடனும் இருந்துவரும் உறவுகளை மேலும் பலப்படுத்தி முன்கொண்டு செல்வதற்கும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், சமாதானம் மற்றும் அனைத்து இனங்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, பலமாக முன்கொண்டு செல்வதே, புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று , ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .