2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘நாட்டில் ஆட்சியொன்று இல்லை’

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஆட்சியொன்று இல்லையென்று இன்று தெளிவாக விளங்குவதாகத் தெரிவித்துள்ள, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ மக்களுக்கு இன்று நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளதுடன் பிள்ளைகளை காவல் காக்க பெற்றோர் பாடசாலைக்குச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்கர்களைச் சந்தித்த மஹிந்த ராஜபக்‌ஷ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தப் போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவை மக்களை உசுப்பேற்றுவதற்காகச் சொல்லும் கருத்துக்கள் இல்லையென்று தெரிவித்துள்ள அவர், இவற்றை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் மோதுகின்றனர் இவற்றை ஊடகங்கள் தினமும் காட்டுகின்றன. இந்த நிலையில் நாட்டில் சிறந்த ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .