2025 ஜூன் 25, புதன்கிழமை

நாத்தாண்டிய வன்முறையில் கைதான 31 பேர் பிணையில் விடுதலை

Editorial   / 2019 மே 29 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

நாத்தாண்டிய- கொட்டராமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சந்தேகநபர்கள் 31 பேர், இன்று (29) சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில மாவட்ட நீதவான் சிறிமெவன் மஹேந்திர ராஜா முன்னிலையில், சந்தேகநபர்கள் இன்று (29) ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான்  தலா 50,000 ரூபாய் சரீரப் பிணையில் அவர்களை விடுதலை செய்துள்ளார்.

இம் மாதம்  13 ஆம் திகதி, நாத்தாண்டிய- கொட்டராமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்த அதேவேளை, மற்றுமொருவர் பாரிய வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .