2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'நான் எதிர்ப்பேன்'

Editorial   / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்  

இன்று இடம்பெறும் இறுதி வாக்கெடுப்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறு வாக்களித்தாலும் வரவு- செலவுத் திட்டத்தை எதிர்த்தே நான்  வாக்​களிப்பேன் எனத் தெரிவித்துள்ள டிலான் பெரேரா எம்.பி, புதிய கூட்டணி தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில், இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் திருட்டுத்தனமாகத் திரைமறைவில் சு.க எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்த அவர், சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து ஐ.தே.கவுக்கு எதிரான பாரிய கூட்டணியை அமைக்கும் முயற்சிகளை வீழ்த்த நினைக்கும் ஐ.தே.க சார்பு ஊடகங்கள், தவறான செய்திகளை வெளியிட்டிருந்ததாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.  

புஞ்சிபொரளையில் உள்ள சுதந்திர ஊடகக் கேந்திர நிலையத்தில், நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, மீண்டும் ஐ.தே.கவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஒருபோதும் சுதந்திரக் கட்சி அமைக்காது என்றார்.  

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரை​க்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்டோர் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர், ​ஐ.தே.கவில் பலருக்கும் ஜனாதிபதியாக வேண்டுமென்கிற கனவு இருப்பதாகவும் கூறினார்.  
ஐ.தே.கவுக்கு எதிரான மைத்திரி - மஹிந்த கூட்டணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு கட்சிகளுடன் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினமும் இது குறித்த பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.  

மைத்திரி - மஹிந்த கூட்டணி அமைந்தவுடன் அப்பேச்சுவார்த்தைகளில் உத்தியோகப்பூர்வமாக கலந்துகொள்வதாக இரு கட்சிகளும் உறுதியளித்திருப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .