2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நீராடச் சென்ற 14 வயது மாணவனைக் காணவில்லை

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலஹா- வாடியாகொட-குருகல்ஓயா நீர்த்தேக்கத்துக்கு நீராடச் சென்ற 14 வயது பாடசாலை மாணவனொருவன் காணாமல் போயுள்ளான்.

தெல்தொட்டை- பள்ளேகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் இன்று பகல் தனது நண்பருடன் நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த போது, திடீரென நீரில் மூழ்கியுள்ளார். எனினும் இவரைக் காப்பாற்றுவதற்கு அவரது நண்பன் முயற்சித்த போதிலும், அது பலனளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு காணாமல் போனவர், உடபிட்டிய- ஹல்- ஹுன்னா பாடசாலையில் தரம் 9இல் கல்வி பயிலும் மாணவனான மின்ஷான் அஹமட் என கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இவரைத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும்  தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X