2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீராவியடிப் பிள்ளையார் கோவில் உற்சவம் ஆரம்பம்

Editorial   / 2019 ஜூலை 06 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்  

பழைய செம்மலை,  நீராவியடிப் பிள்ளையார் கோவிலின் வருடாந்த உற்சவம், இன்று (06) அதிகாலை, கோட்டைக்கேணி  பிள்ளையார் கோவிலில் இருந்து மடப்பண்டம்  எடுத்து வருதலுடன் ஆரம்பமாகியுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று அதிகாலை 3 மணியளவில் கோட்டைக்கேணி   பிள்ளையார் கோவிலில் மடை பரவி பூசைகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து  மடப்பண்டம்  எடுத்து வரப்பட்டு, தற்போது நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு அங்கே, ஆண்டு உற்சவங்கள் ஆரம்பமாகி  இருக்கின்றது.

தொடர்ந்து 108 பானைகளில் பொங்குகின்ற பொங்கல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பூஜை வழிபாடுகள் இடம்பெறவிருக்கின்றன.

இந்த நிலையில், கோவிலில், நூற்றுக்கு மேற்பட்ட பொலிஸார்  குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .