2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நீரில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு

Freelancer   / 2024 மார்ச் 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தப்போவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த ஹீல்ஓய சங்கானந்த தேரர் என்பவரே நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் வனாத்தவில்லு வன்னாத்தவில்லு ஸ்ரீ தர்மராஜ விகாரைக்கு வருகை தந்த மேற்படி இளம் பிக்கு, அங்கிருந்து பிக்குகள் குழுவுடன் தப்போவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றபோதே இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .