2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

நீர்நிலைக்குள் வீழ்ந்து குழந்தை பலி

Freelancer   / 2025 ஜனவரி 05 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தில் நேற்றுக் காலை நீரோடையில் வீழ்ந்து முருகேசு விகான் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

குறித்த நீர்நிலைக்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து குழந்தை தத்தி நடந்துவந்து நீரோடைக்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது நீருக்குள் வீழ்ந்துள்ளது.

குழந்தை மீட்கப்பட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் இடைவழியில் உயிரிழந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காகக் குழந்தையின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7