2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீர்வீழ்ச்சிக்கு சென்ற கிழக்கு இளைஞர்கள் மாயம்

Freelancer   / 2023 மார்ச் 21 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய பிரரேசத்திலுள்ள எல்லேவெல நீர்வீழ்ச்சிக்குக் குளிக்கச் சென்ற இளைஞர்கள் நால்வர் இன்று காலை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நால்வரும் நீர்வீழ்ச்சிக்கு குழுவாக சேர்ந்து சுற்றுலாப்பயணம் சென்றதாக தெரிய வருகிறது. காணாமல் போன 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு குறித்த இளைஞர்கள் நீராட சென்றதாக தெரிய வந்துள்ளது. அங்கிருந்த குடியிருப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்தும் அதைப் பொருட்படுத்தாமல் அந்த இளைஞர்கள் ஆபத்தான பகுதியில் குளித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் மீட்புப் பணியாளர்களும் பிரதேசவாசிகளும் காணாமல் போன இளைஞர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .