2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நுவரெலியா பள்ளிவாசல் சோதனை: இராணுவ சிப்பாய் படுகாயம்

Editorial   / 2019 ஏப்ரல் 27 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். ரமேஸ்

நுவரெலியா நகரிலுள்ள பழைய கடை வீதியிலுள்ள பெரியபள்ளிவாசலில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய், 30 அடி உயரத்திலிருந்து கீழ் விழுந்து, பலத்த காயங்களுடன், நுவ​ரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை முதல், நுவரெலியா நகரில் முன்னெடுக்கப்பட்டுவரும் ​சோதனையின் போது, நுவரெலியா பள்ளிவாசலில், முழுச்சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பள்ளிவாசலின் 30 அடி உயரமான பகுதியிலும் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இராணுவ சிப்பாய், தவறி கீழே விழுந்துள்ளார் என்றும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .