2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியாவுக்கு கேபிள் கார் வேலைத்திட்டம்

Editorial   / 2019 ஜூலை 03 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயாவிலிருந்து சிங்கிள் டீ கந்த ஊடாக, நுவரெலியா கிரெகரி வாவி வரை கேபிள் கார் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் நவீன் திசாநாயக்க முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

Outdoor Engineering Lanka (Pvt) Ltd, .தன்  வெளிநாட்டு பங்குதாரரரான Doppelme Cable Car Company ஆகிய நிறுவனங்கள் இந்த வேலைத்திட்டத்துக்கான யோசனையை முன்வைத்திருந்தது.

இந்த வேலைத்திட்டத்துக்காக, 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாகவும் நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து 21 தூண்களைக் கொண்டு அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம்  ஒரே நேரத்தில் 10 பயணிகள் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .