2024 மே 01, புதன்கிழமை

நெஞ்சை பதற வைத்த பச்சிளம் குழந்தைகளின் மரணம்

Freelancer   / 2024 ஏப்ரல் 15 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் கொங்கிறீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை  விழுந்ததில் 8 வயதுச் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிறீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் சிலையே குழந்தையின் உடலில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பொலன்னறுவை - அரலகங்வில ருஹுனுகம கிராமத்தில் உள்ள வீடொன்றில் பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி ஒன்று தலையில் விழுந்ததில் மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹிருனி ரஷ்மிகா தேவ்மினி என்ற சிறுமியே இதில் உயிரிழந்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .