2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நேற்று பதிவானோர் குறித்த தகவல்

Editorial   / 2020 ஜூன் 02 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (01) இனங்காணப்பட்டோரில் நால்வர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர்கள் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் இருந்து  மே மாதம் 24 ஆம் திகதி 276 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் சோதனை மூலமே குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அத்துடன், ஒருவர் பெலருஸ் நாட்டிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் ஏனையோர் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், தொற்றாளர்களாக பதிவான இராணுத்தினரிடமிருந்து வைரஸ் தொற்று மேலும் பரவுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (01) 10 பேர்  இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .