Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில், மரணதண்டனை தீர்ப்புக்குள்ளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கொழும்பு - வெலிக்கடைச் சிறைச்சாலையின் சீ-3 அறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை, பீ-3 அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவரும், சிறைச்சாலையில், மரண தண்டனைக் கைதிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சீ-3 அறையில், தனித்தனியாகத் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த சீ-3 அறையில், மரணதண்டனை தீர்ப்புக்குள்ளான சுமார் 40 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலே சுதா உள்ளிட்ட முன்னிலை போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளும் இந்த சீ-3 அறையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காலைக்கடன்களை மேற்கொள்வதற்கான, மலசலகூடம் மற்றும் குளியல் வசதிகளும், அவ்வறைகளிலேயே அமைந்துள்ளன.
இந்த சீ-3 அறைத் தொகுதியிலுள்ள சிறைக்கூடங்கள், வெவ்வேறாகவே அமைந்துள்ளன. சில சிறைக்கூடங்களில், மும்மூன்று கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாரிய குற்றங்களை மேற்கொண்ட குற்றவாளிகள், தனித்தனியாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், துமிந்த சில்வாவுக்கும், தனிச் சிறைக்கூடமொன்றே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மரணதண்டனை தீர்ப்புக்குள்ளான கைதிகள், நாளாந்தம் அரை மணிநேரம் உடற்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவதுடன், அந்த அரை மணிநேரத்துக்கே, அவர்கள் தங்களது, சிறைக்கூடங்களிலிருந்து வெளியே வர முடியும் என்ற கட்டுப்பாடு, சிறைச்சாலையில் நிலவுகின்றது.
இவ்வாறான மரண தண்டனைக் கைதிகளை, அவர்களது உறவினர்கள் பார்வையிட வேண்டுமாயின், அதற்கு வாரத்தில் ஒரு தினம் மாத்திரமே அனுமதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
6 hours ago
7 hours ago