2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பாடசாலையிலிருந்து இலங்கை அகதி மாணவர்கள் 15 பேர் திடீர் நீக்கம்

George   / 2016 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இருந்து வந்து அகதிகளாக தமிழகத்தில் வாழும் 15 தமிழ் மாணவர்கள் அச்சிறுபாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் படித்து வந்தனர்.

இவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்று கூறி படித்துக் கொண்டிருந்த மாணவர்களை பாடசாலையில் இருந்து திடீரென்று நீக்கியுள்ளது தனியார் பாடசாலை நிர்வாகம்.

தனியார் தொண்டு நிறுவனம் ஒரு வாடகை வீட்டில் இலங்கை தமிழர்கள் சுமார் 55 பேரை தங்க வைத்துள்ளது. மேலும், இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள், பெங்களூரைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த குழந்தைகளும் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழந்தைகள், அதே பகுதியில் உள்ள அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை மற்றும் தனியார் பாடசாலையில் சேர்த்து படிக்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 15 இலங்கை தமிழ் அகதி மாணவர்களை நீக்கி உள்ளதாக தனியார் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

போதிய ஆவணம் இல்லாத்தால்தான் மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும், இனி மேல் போதிய ஆவணங்கள் இல்லாமல் எந்த மாணவரையும் சேர்த்துக் கொள்ள போவதில்லை என்றும் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5