Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Kanagaraj / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை 21ஆம் திகதி, ஞாயிற்றுக்கிமையன்று நடைபெறவிருக்கின்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட ஆலோசனைகளை வழங்கியுள்ளன.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜே. புஷ்பகுமார விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புலமை பரிசில் பரீட்சைக்கான முதலாவது வினாத்தாளுக்கான பரீட்சை காலை 9.30 இலிருந்து 10.15 வரைக்குமான 45 நிமிடங்களை கொண்டிருக்கும்.
இரண்டாம் வினாத்தாள் முற்பகல் 10.45 மணிமுதல் நண்பகல் 12 மணி வரைக்குமான 1 மணிநேரம் 15 நிமிடங்களை கொண்டிருக்கும்.
ஆகவே, பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபகங்களுக்கு காலை 9 மணிக்கு முன்னரே சமூகமளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago