2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பகிடிவதை தொடர்பில் 19 மாணவர்களின் விளக்கமறியல் நீட்டிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகிடிவதை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ருகுணு பல்கலைக்கழக பிரதான மாணவர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட 19 மாணவர்களின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் மீண்டும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதிய மாணவர் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் இன்றை தினம் மாத்தறை பிரதான நீதவான இசுறுநெத்தி குமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மாத்தறை மெதவத்தையில் உள்ள விடுதியில் வைத்து இந்த பகிடிவதை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

புதிய பகிடிவதை சட்டத்தின் கீழ் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X