Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜூன் 04 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவி உள்ளிட்ட 4 சிரேஷ்ட மாணவர்களும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றம் இன்று (4) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் விவசாய உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப டிப்ளோமா பயிலும் முதலாம் தர மாணவி ஒருவர் சமீபத்தில் கல்லூரிக்கு அருகிலுள்ள வாவியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அருகிலிருந்த ஒரு குழுவினர் மாணவியை மீட்டு உடனடியாக குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர் வைத்தியசாலை பொலிஸார் குறித்த மாணவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்தனர். மேலும் கல்லூரியின் பல சிரேஷ்ட மாணவர்கள் அவளைத் துன்புறுத்திய சம்பவத்தின் காரணமாக அவள் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago