2025 மே 03, சனிக்கிழமை

படுத்து இருந்தவருக்கு பொலிஸ் வலை

Editorial   / 2022 ஜூலை 27 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் ஜூலை 9 ஆம் திகதியன்று கைப்பற்றியிருந்தனர். அதன்பின்னர் அங்கு பல்வேறான செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், ​போராட்டக்காரர்களில் ஒருவர், ஜனாதிபதி கொடியை கழற்றி, அதனை அங்கிருந்த கட்டிலில் மேற்போர்வையாக விரித்து, அதன் ​மேல் படுத்திருந்தார்.

அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பதவியேற்றியிருந்தார். அதற்கு குரலும் கொடுத்திருந்தார்.

அதில் அவர், ” நான் ஜனாதிபதியின் கொடியை, கட்டிலில் விரித்து படுத்து இருக்கின்றேன். எனக்கு கீழேயே கொடி இருக்கின்றது. ஆகையால், அவர் வீட்டுக்குப் ​போகவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தக் கொடியை எடுத்துக்கொண்டு போய், ஏரிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அவரை தேடியே பொலிஸார் வலைவிரித்துள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X