Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Freelancer / 2022 மே 19 , மு.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஷ்
மூன்று தசாப்பதகாலம் நீடித்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து 13 ஆவது வருட நிறைவு நாளில் படையினருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, சபைமுதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன ஆகியோர் சபையில் கூறினர்
பாராளுமன்றம் நேற்று (18)காலை 10 மணிக்கு கூடியது. இந்த நிலையிலேயே எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவும் , சபைமுதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவும் படையினருக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.
அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில், இன்று மிக முக்கியமான நாள், நாட்டில் மூன்று தசாப்தகாலம் நீடித்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து 13 ஆவது வருட நிறைவு நாள் மஹிந்த ராஜபக் ஷ தழைத்துவம் வழங்கிய காலத்திலேயே நாடு பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. அவரின் தலைமைத்துவமும் படையினரின் அர்ப்பணிப்புமே இந்த வெற்றிக்கு காரணம். எனவே இன்றைய நாளில் படையினருக்கு எமது நன்றிகளையும் கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
இதேபோன்றே எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவும் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்ட நாளில் அதற்காக தம்மை அர்ப்பணித்த படையினருக்கு நன்றிகளையும் கௌரவத்தையும் தெரிவிப்பதாக கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
6 hours ago
7 hours ago