2024 மே 20, திங்கட்கிழமை

பெண் பொலிஸை வன்புனர முயன்ற கான்ஸ்டபிள் கைது

Freelancer   / 2024 மே 10 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்ற குற்றத்தின் பேரில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், மாங்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

மேலும், மாங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கரையோரப் பொலிஸாரின் மகளிர் படைமுகாமிற்கு இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த குறித்த கான்ஸ்டபிள், அங்கு உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .