2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பணிகளுக்கு இடையூறை ஏற்படுத்திய நபர் ஹெரோய்னுடன் கைது

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டவளை பி​ரதேசத்தில் பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தி, காரில் தப்பிச் சென்ற சந்தேகநபரொருவரை பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர்.

வட்டவளை மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களில் நேற்றைய தினம் பொலிஸார் பரிசோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டுகொண்டிருந்த ​பொழுது, கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கி பயணஞ்செய்த காரொன்றை பரிசோதனை செய்த போது, காரிலிருந்த இளைஞர் ஹெரோய்ன் போதைப்​பொருளை வைத்திருந்த நிலையில், அவரை கைது செய்ய முயன்ற போது, குறித்த இளைஞர் பொலிஸாரை தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், தப்பிச் சென்ற குறித்த இளைஞரை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளதுடன், அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜ​ர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் ​தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .