2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பண்டாரவளையை காணொளியில் பதிவு செய்தவர் கைது

Editorial   / 2019 மே 12 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை பிரதேசத்தில் பிரதான பஸ் தரிப்பிடத்தையும், பிரதான வீதியையும் காணொளியில் பதிவு செய்துகொண்டிருந்த நபரொருவரை பண்டாரவளை பொலிஸார் நேற்று (11) கைது செய்துள்ளனர்.

பண்டாரவளை புனித தோமஸ் வீதியை வசிப்பிடமாகக்கொண்ட, 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை நகரை காணொளியில் நபரொருவர் பதிவு செய்கின்றாரென தமக்கு தகவலொன்று கிடைக்கப்பெற்றதாகவும், குறித்த பகுதிக்கு உடனடியாக விரைந்த வேளையில், இந்நபரை கைது செய்ததாகவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .