2024 மே 15, புதன்கிழமை

புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

Freelancer   / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்‌ஷ, மருதானை – சுதுவெல்ல விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து நேற்று முன்தினம் நடத்திய புத்தாண்டு நிகழ்வுகள் டீன்ஸ் வீதி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றன.

இதன் போதான பரிசளிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றததோடு, முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட புத்தாண்டு அழகிகளுக்கு ஜனாதிபதியினால் மகுடம் அணிவிக்கப்பட்டது.

அகில இலங்கை உடல் கட்டழகு போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் சைக்கிளோட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஜனாதிபதி பரிசுகளை வழங்கினார்.

கித்சிறி ராஜபக்‌ஷவினால் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .