2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பதில் பொலிஸ் மாஅதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்

Janu   / 2025 செப்டெம்பர் 17 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையிலேயே இவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, மத்திய மாகாணம் மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குக்கு பொறுப்பாக செயற்படுவதோடு,முன்னதாக நான்கு சந்தர்ப்பங்களில் இவர் பதில் பொலிஸ் மாஅதிபராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X