2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பதவி துறந்த முஸ்லிம் எம்.பிக்களில் இருவர் மீண்டும் பதவியேற்பர்?

Editorial   / 2019 ஜூன் 18 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர், மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளைப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், கபீர் ஹஸீமும் அப்துல் ஹலீமும், தாங்கள் ஏற்கெனவே வகித்த அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்விருவரைத் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் எம்.பிக்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் ஆகியோரும் முன்னர் இராஜாங்க அமைச்சுகளைப் பொறுப்பேற்றிருந்த நால்வரும் பிரதிய அமைச்சராகவிருந்த மற்றொருவருமான ஒன்பது பேரே, இவ்வாறு தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

எவ்வாறாயினும், அவர்கள் அனைவரும், தாங்கள் வகித்த அமைச்சுகளைப் பொறுப்பேற்பார்களா என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என்கிற நிலையில், மேற்படி இருவர் மாத்திரம், இப்போதைக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கவிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .