2025 ஜூன் 16, திங்கட்கிழமை

'பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களில் மாத்திரமே தங்க வேண்டும்’

Editorial   / 2020 ஜூன் 23 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல், விடுதிகளில் மாத்திரமே தங்க முடியுமென, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார பிரிவின் ஆலோசனைக்கு அமையவே, இத்தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் இதுவரை 5000 ஹோட்டல்கள், விடுதிகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்படாத நிலையில், சுமார் 20,000 ஹோட்டல்கள், விடுதிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பதிவு செய்யப்படாத விடுதிகள், ஹோட்டல்களை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் விரைவாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X