2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பயங்கரவாத தடைப் பட்டியலில் இருந்து புலிகளை நீக்குமாறு கோரிய மனு நிராகரிப்பு

Ilango Bharathy   / 2021 நவம்பர் 29 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பாவின் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் சர்வதேச பயங்கரவாத அமைப்பு என்று, விடுதலைப்
புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரியே இந்த மேன்முறையீட்டு மனு
தாக்கல் செய்யப்பட்டிருந்தது.டென்மார்க்கை அடிப்படையாகக் கொண்ட விடுதலைப் புலிகளின் அரசியல் தரப்பினர் இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ததாக அறிய முடிகிறது.

குறித்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த நீதிமன்றம், சட்ட செலவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவுகள் ஆகியவற்றை செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளதாகத்
தெரியவருகிறது.ஐரோப்பிய ஒன்றியத்தினால் முதன் முதலாக தமிழீழ விடுதலைப் புலிகள்
அமைப்பு கடந்த 2006 ஆம் ஆண்டில் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பு மற்றும் மீள் உருவாக்கத் திறன் இன்னும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2019 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் சேர்த்ததையடுத்தே, இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை ஐக்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்தும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .