Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 27 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதச் செயற்பாடுகளை முற்றாக இல்லாதொழிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதற்குத் தாயராக உள்ளதாக, மாலைதீவு ஜனாதிபதி இப்றாஹிம் மொஹமட் சோலிஹ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலி சிறிசேனவுடன் தொலைபேசியில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்த அவர், சகோதர நாடு என்ற வகையில், அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையுடன் கைகோர்த்து செயற்படுவதற்குத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.
தற்கொலைக்குண்டுத்தாக்குதலால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அனைவருக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாகவும் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
1 hours ago
4 hours ago