2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘பயங்கரவாத்தை ஒழிக்கும் தகுதி எமது படையினருக்கு உண்டு’

Editorial   / 2019 மே 20 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத அடிப்படைவாதம் என்பது எப்போது தலைதூக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டும். நிரந்தர அமைதியை ஏற்படுத்தப் படையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தச் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். அதற்கான தகுதி எமது படையினருக்கு உண்டு என்றார். 

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க, சர்வதேசத்துடன் கைகோர்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவையொட்டி, நாடாளுமன்ற மைதானத்தில் நேற்று (19) இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வுக்குத் தலைமைதாங்கி உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“30 வருடகாலத்தில் யுத்தத்தில் உயிர்நீத்த படையினருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஊனமுற்ற படையினருக்கும் எனது நன்றி; இப்போது சேவையில் கடமையாற்றும் அனைத்துப் படையினரை நான் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்” என்றார்.

நாம் இவர்களை நினைவு கூர்வது, யுத்தமன்றிக் கடந்த 10 வருடங்கள் கடந்தாலும், இவர்களின் குடும்பங்கள் 40 வருடங்களுக்கு மேலாக இவர்களை மனதில் வைத்துக் கொண்டிருக்கின்றனர் என நினைவுறுத்திய ஜனாதிபதி, நாங்கள் மிகவும் சிரமப்பட்டு, இந்த யுத்தத்தை வென்றோம். அரசியல் தலைவர்களை நாம் இழந்தோம் என்றார்.

“இந்தியாவிலிருந்து படைகள் வந்தன. ஆனாலும் புலிகளை வெல்லமுடியவில்லை. வெளிநாட்டுப் படைகள் வந்தாலும் இறுதியில் எமது படைகளால்த்தான் புலிகளை வெல்லமுடிந்தது. அதுவே வரலாறாகும்” என்றார்.

அப்படியான நிலையில்தான், கடந்த ஈஸ்டர் தினத்தன்று இன்னுயிர்களை இழந்து, பயங்கரவாதத்தை எதிர்கொண்டோம். ஏப்ரல் 21 என்பது, இலங்கைப் பிரச்சினையல்ல. அது சர்வதேசப் பிரச்சினையாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புலனாய்வுத்துறையினர் தமது அனுபவங்களைக் கொண்டு, இந்தச் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்கவேண்டும்; அதற்கான தகுதி, எமது படையினருக்கு உண்டு என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .