2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பயணிகளுக்கு உணவளிக்கும் ஹோட்டல்களில் சோதனை

George   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பஸ் பயணிகளுக்கு உணவுகளை வழங்கும் உணவகங்களை விசேட சோதனைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த உணவகங்களில் காணப்படும் பல்வேறான குறைபாடுகள்  தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவிக்கின்றது.

உணவுகளின் தூய்மை, சுகாதார தன்மை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள குறைப்பாடு மற்றும் அதிக விலைக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுதல் உள்ளிட்டவை தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித் சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபாலவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய தூர சேவையில் ஈடுபடும் பஸ்கள் நிறுத்தப்படும் உணவகங்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், இரண்டு வாரங்களுக்குள் குறித்த உணவகங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

1 hours ago - 0     - 2

‘படை தலைவன்’

1 hours ago - 0     - 4

மன்னிப்பு

1 hours ago - 0     - 2

‘மெஜந்தா’

1 hours ago - 0     - 2