2025 ஜூன் 11, புதன்கிழமை

பயணிகளை நடுத்தெருவில் இறக்கிவிட்ட மூவருக்கு சிக்கல்

Simrith   / 2025 ஜனவரி 08 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் வாகன சோதனை வேலைத்திட்டத்தின் மத்தியில் பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட பஸ்ஸின் உரிமையாளர், சாரதி மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீதி விதிகளை மீறிய குற்றத்திற்காக பொலிஸார் நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது, ​​பாணந்துறை - புறக்கோட்டை பயணிக்கும் 100 இலக்கப் பேருந்து பயணிகளை நடுரோட்டில் இறக்கி விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை 2025 ஜனவரி 15 ஆம் திகதி வரை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதுடன், ஓட்டுனருக்கு ரூ 2500 மற்றும் நடத்துனருக்கு ரூ. 750 என அபராதம் விதித்துள்ளது.

அதற்குள் இருவரும் வேறு பேருந்தில் பணிபுரிந்தால் குறித்த பேருந்தின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுமென மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மேலும் எச்சரித்துள்ளது.

இருவரும் 21 ஜனவரி 2025 அன்று பயிற்சியில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது, குறித்த பேருந்தின் வீதி அனுமதிப்பத்திரத்தை விசாரணைக்கு உட்படுத்தி 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10