2024 மே 20, திங்கட்கிழமை

’பெரும் சுதந்திரம் கிடைத்ததை போன்றது’

Freelancer   / 2024 மே 09 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போனமை பாராளுமன்றத்திற்கும் சபாநாயகருக்கும் பெரும் சுதந்திரம் கிடைத்ததை போன்றது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டயனா கமகே தொடர்பான இரட்டைக் குடியுரிமை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் இன்று முதல் பாராளுமன்ற உறுப்பினர் அல்ல. இதன்மூலம் இந்த பாராளுமன்றத்திற்கு பெரும் சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதுடன், சபாநாயருக்கும் பெரும் சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதனை கூறுகின்றோம் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X