2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பல கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது

R.Tharaniya   / 2025 ஜூன் 22 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹத்தரலியத்தபகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட வந்த ஒருவர்  வழங்கிய ரூ.5,000 நாணயத்தாள்குறித்து சந்தேகம் அடைந்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, விசாரணையின் போது மூன்று போலிரூ.5,000 தாள்களுடன் அந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரித்ததில், ஹத்தரலியத்த பொலிஸ் பிரிவின் உடுவா பகுதியில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் ரூ.5,000போலி நோட்டுகள்- 08 ரூ.500 நோட்டுகள்-04  ரூ.100 நோட்டுகள்-06 மற்றும் 09 போலி ரூ.50 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, கள்ள நோட்டுகளை அச்சிட்ட தாக கூறப்படும் கலகெதர பகுதியில் உள்ளஒரு தகவல் தொடர்பு வசதியின்உரிமையாளர், பொலிஸார் அந்த இடத்தை சோதனைசெய்தபோது தப்பி ஓடிவிட்டார். 

கள்ள நோட்டுகளை அச்சிடப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 01 எப்சன் பிரிண்டர், சாம்சங்கணினி மற்றும் ஒரு CPU இயந்திரத்தை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .