2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பல்கலைக்கழக மாணவன் மரணம்: 20 பேரிடம் வாக்குமூலம்

Freelancer   / 2025 மே 03 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பாக 20 மாணவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவரின் மரணம் பகடிவதை வன்கொடுமையால் ஏற்பட்டதாக சந்தேகிக்கும் பல்கலைக்கழக மாணவ. ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலும், இறந்த மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையிலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பகடிவதை ஒரு குற்றம் என்பதால், அத்தகைய குற்றம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் மற்றும் சப்ரகமுவா பல்கலைக்கழகமும் இந்த மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X