2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பலத்த காற்று குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Simrith   / 2025 ஜூன் 15 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) பலத்த காற்று வீசக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், திருகோணமலை மாவட்டம் உட்பட வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

காலை 5:30 மணிக்கு (MET) வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வானிலை எச்சரிக்கைகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருக்கவும், தேவைப்பட்டால் உதவிக்கு 117 அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும் DMC அறிவுறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X