2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

புலமைப் பரிசில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2024 மே 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024ம் ஆண்டுக்கான 5ம் தர புலமை பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 27ஆம் திகதி முதல், ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விண்ணப்ப திகதி முடிவடைந்ததன் பின்னர் நீடிக்கப்படாது என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .