2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பலஸ்தீன மக்களுக்காக சவுதி அரேபியா 30 மில்லியன் டொலர் உதவி

Editorial   / 2025 ஜூன் 27 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபிய அரசினால் பலஸ்தீன மக்களுக்காக 2025 ஆம் ஆண்டிற்கான உதவித் தொகை 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று (27) அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இரு புனித பள்ளி வாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் அவர்களின் உத்தரவின் பேரில் சவுதி அரேபிய அரசு பாலஸ்தீனுக்கு தொடர்ந்தும் உதவும் திட்டத்தின் கீழ் இன்று 2025 ஆம் ஆண்டிற்கான 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி 9,150,000,000) அன்பளிப்பாக வழங்கியது.

கடந்த சில ஆண்டுகளில் சவுதி அரேபியா பாலஸ்தீன மக்களுக்கு உதவும் முகமாக சுமார் 5.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இது பாலஸ்தீனுக்கு சவுதி அரேபியா தொடர்ச்சியாக வழங்கும் அதன் ஆதரவின் ஒரு பகுதியான மனிதாபிமான, நிவாரணம் மற்றும் மேம்பாட்டு உதவிகளுக்குரியதாகும்.

சகோதர பாலஸ்தீன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அங்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதற்கும், அவர்களின் துன்பங்களைத் தணிப்பதற்கும் சவுதி அரேபியா தொடர்ந்தும் உதவுகிறது.

இது பலஸ்தீன் அரசுக்கும் மக்களுக்கும் தொடர்ச்சியாக உதவுவதாக வாக்களித்த சவுதி அரேபியாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பின்னணியிலும், பலஸ்தீன் மக்களுக்கு செய்யும் கடமையுணர்விலும் அமைந்த மிகப் பெரிய மனிதாபிமான உதவியாகும்.

பாலஸ்தீன் அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் உதவும் சவுதி அரேபியாவின் இவ்வுதவிகளை ஜோர்தானில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் வைத்து பாலஸ்தீன் நிதி அமைச்சர் அவர்களிடம் சவுதி அரேபிய இணைத்தூதுவர் முஹம்மத் பின் ஹசன் முஃனிஸ் அவர்கள் இன்று கையளித்தார்கள்.

இது சவுதி அரேபியாவுக்கு புதிய விடயமல்ல, ஆச்சரியப்படும் விடயமுமல்ல. மாறாக சவுதி அரேபியா பலஸ்தீன் உறவுகளுக்கு தொடராகச் செய்யும் மனிதாபிமான உதவியாகும். இது இன்று நேற்றில் இருந்து அல்ல, மாறாக சவுதி அரேபிய ஸ்தாபகர் மன்னர் அப்துல் அஸீஸ் ஆட்சி செய்த அவருடைய காலத்தில் இருந்து தற்போதைய மன்னர் ஸல்மான் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஆகியோரின் காலம் வரை யாரிடமும் எவ்வித நன்றியையும் பிரதி உபகாரங்ளையும் எதிர் பார்க்காமல் அல்லாஹ்வுக்காகச் செய்து வரும் மனிதாபிமான உதவிகளாகும்.

சவூதி அரேபியா பலஸ்தீன் உறவுகளுக்கு அரசியல் மற்றும் பொருளாதார மனிதாபிமான உதவிகளை வழங்கும் தனது உறுதியான நிலையில் இருந்து எப்போதும் மாறவில்லை.

எனவே பலஸ்தீன அரசுக்கும் அதன் மக்களுக்கும் இத்தாராள மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தொடர்ச்சியான ஆதரவினை அவர்களுக்கு வழங்குவதற்கும் இச்சிறப்பான சந்தர்ப்பத்தில், இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர், மற்றும் இளவரசர் அவர்களுக்கும், சவுதி அரேபிய அரசாங்கத்துக்கும் எங்கள் ஆழ்ந்த நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் சவுதி அரேபிய மன்னர், இளவரசர், மற்றும் அந்நாட்டு மக்கள், சவுதி அரேபிய அரசு ஆகியவற்றை உலக முஸ்லிம்களுக்கும் உலக மக்களுக்கும் சிறந்த சொத்தாக ஆக்கியருள் புரிவானாக என   கொழும்பு அல் ஹிக்மா நிறுவன  பணிப்பாளர் எம்.எச். ஷைஹுத்தீன் மதனி தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .