Janu / 2026 மார்ச் 24 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள் குறித்து தெளிவுபடுத்தவும், அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்கவும் இலங்கை பொலிஸ் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், நம்பிக்கையுடன் எவ்விடத்திற்கும் சுதந்திரமாக நடமாடவும் கூடிய பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்குப் பாடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பொதுப் பாதுகாப்பிற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், கவனக்குறைவு அல்லது விழிப்புணர்வு இன்மையால் மக்கள் இன்னமும் பாரிய குற்றங்களுக்குப் பலியாகி வருவதை அண்மைக்காலச் சம்பவங்கள் காட்டுகின்றன.
இதற்கு அண்மைய உதாரணமாக, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சம்பவத்தைக் குறிப்பிடலாம். அங்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் இரு பெண்கள் கடத்தப்பட்டு, அவர்களுக்குப் பலவந்தமாக மயக்கமருந்து கலந்த பானம் புகட்டப்பட்டு, அவர்களது தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மற்றவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இவ்வாறான சம்பவங்களைக் கருத்திற் கொண்டு, பொதுமக்கள் தமது அன்றாட வாழ்வில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் பின்வரும் விடயங்களைக் கடைப்பிடிக்குமாறும் இலங்கை பொலிஸ் கேட்டுக்கொள்கிறது:
கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்
மேலதிக பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்
இவ்வழிகாட்டல்களைப் பின்பற்றி புத்திசாலித்தனமாகவும் விழிப்புணர்வுடனும் செயற்படுவது மிகவும் அவசியமென இலங்கை பொலிஸ் வலியுறுத்துகிறது. இத்தகவல்களை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அயலவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் சமூக விழிப்புணர்வை வலுப்படுத்தி, இவ்வாறான குற்றங்களைத் தடுக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இந்த அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்லுமாறு ஊடக நிறுவனங்களிடம் இலங்கை பொலிஸ் கோரிக்கை விடுக்கின்றது.
20 minute ago
23 minute ago
39 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
39 minute ago
47 minute ago