2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பள்ளத்தில் புரண்டது வான்: மூவர் பலி

Editorial   / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல வெல்லவாய வீதியின் 24 ஆவது மைல்கல்லுக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று வீதியிலிருந்து விலகி 150 பள்ளத்தாக்கில் புரண்டாதால் அதில் பயணித்த மூவரும் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பதுளை மின்சார சபை அலுவலகத்தின் ஊழியர்கள் மூவரே இவ்வாறு பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் காலியில் மரண வீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த வேளை சாரதிக்கு நித்திரை வந்தாலேயே விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அத்தோடு, இந்த வானில் பயணித்த மேலும் மூவர் வெல்லவாய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .