2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பள்ளிவாயிலுக்கு பின்புறத்திலிருந்து வெடிபொருள்களடங்கிய பொதி மீட்பு

Editorial   / 2019 மே 05 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை ஜூம்மா பள்ளிவாயிலுக்குப் பின்புறத்திலிருந்து டெடனேடர்கள் உட்பட வெடிபொருள்கள் உள்ளடங்கிய பொதியொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியிலிருந்து ஜெலிக்னைட்கள், டெடனேடர்கள், 20 அடி நீளமான நூல், 250 கிலோகிராம் அமோனியா, இரண்டு அடி நீளமான வயர் ஆகியன காணப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு அலைபேசி வழியாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்தே, பொலிஸ் குழுவினர் இணைந்து நடத்திய தேடுதலின் ​போது, குறித்த வெடிபொருள்கள் உள்ளடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .