2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை

பஸ் கட்டண திருத்தம் ஓகஸ்ட் வரை ஒத்திவைப்பு

Editorial   / 2025 ஜூன் 01 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜூலை மாதத்தில் வழக்கமாக அமலுக்கு வரும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒகஸ்ட் வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்   ஞாயிற்றுக்கிழமை (01) அறிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன  தெரிவித்தார்.

 "பேருந்து கட்டண திருத்தம் வரவிருந்தாலும், ஒகஸ்ட் வரை தற்போதுள்ள கட்டணங்களைத் தொடர நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

வருடாந்திர கட்டண திருத்தம் வழக்கமாக ஒவ்வொரு ஜூலை மாதமும் அமலுக்கு வரும், ஆனால் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு அதை தாமதப்படுத்த சங்கத்திற்கு விருப்புரிமை உள்ளது என்று விஜேரத்ன கூறினார். "ஒரு சங்கமாக, பொறுப்பான அமைச்சர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, கட்டண திருத்தங்களை நாங்கள் முன்னர் ஒத்திவைத்துள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.

இந்த முடிவு தொடர்பாக மற்ற பேருந்து சங்கங்களுடன் எதிர்வரும் வாரங்களில் கலந்துரையாடல்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .