2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

‘பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது’

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எக்காரணத்துக்காகவும் பஸ் கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லை என, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையில் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக, இலங்கைத் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அண்மையில் கோரியிருந்தது.

எவ்வாறாயினும், நட்டத்தை எதிர்கொள்ளும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு, மாற்று வழியில் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ள அமைச்சர், எதிர்வரும் காலத்தில், அரைசொகுசு பஸ் சேவையை இரத்துச் செய்வதாகவும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .