2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பஸ் டயர்களை பஞ்சராக்கிய விஷமிகள்

Editorial   / 2019 ஜூன் 27 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடையாளம் தெரியாத நபர்களால், பண்டாரகம பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக, நேற்று இரவு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  6 பஸ்களின் டயர்களின் காற்று வெளியேற்றப்பட்டுள்ளது.

 இதில் பாணந்துறை பஸ் டிப்போவுக்குரிய பஸ்கள் 3, மொரட்டுவ டிப்போவுக்குச் சொந்தமான 2, உடஹாமுல்ல டிப்போவுக்குரிய பஸ் ஒன்றின் டயர்களின் காற்றே வெளியேற்றப்பட்டதாக, பாணந்துறை டிப்போவின் முகாமையாளர் டீ.ஜே.சீ. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக 1000க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் ​அசௌகரியத்துக்கு உள்ளாகியதாகவும் இது தொடர்பில், பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பாணந்துறை- ஹொரனை, பாணந்துறை- அட்டலுகம ஆகிய பிரதேசங்களில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதிகளும் நடத்துந​ர்களும் என்று டீ.ஜே.சீ. பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .