2025 ஜூலை 05, சனிக்கிழமை

பஸ் நடத்துனர் மீது தாக்குதல்

Editorial   / 2019 பெப்ரவரி 09 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புல்மோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ்ஸின் நடத்துனர் மீது இன்று (09) காலை 10.30 மணியளவில் சிலாபம் நகரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பகுதியைச் பி.ரொஷான் ( வயது 24) என்பவரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

நீர்கொழும்பு- சிலாபம் மார்க்கம் ஊடாக சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் நடத்துனர் ஒருவர் மீது வியாழக்கிழமை (07) நீர்கொழும்பு பொலிஸாரினால் தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்தும், நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரியும் சிலாபம் - நீர்கொழும்பு தனியார் பஸ் நடத்துனர்கள் சங்கம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் குழு ஒன்றாலேயே குறித்த தனியார் பஸ் நடத்துனர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .