2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பஸ் விபத்தில் ஐவர் காயமடைந்தனர்

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம்- அநுராதபுரம் வீதியின் சாலியவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐவர் காயமடைந்து, நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு வரை பயணித்த அதி சொகுசு பஸ்ஸொன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வாகனத்தில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை விபத்து இடம்பெற்ற பஸ்ஸில், 23 பேர் இருந்ததுடன், இதில் ஐவர்  காயமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .