2025 ஜூன் 28, சனிக்கிழமை

பாதுகாப்பு கடமைகளில் 8000 போக்குவரத்து பொலிஸார்

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு  பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் 8000  போக்குவரத்து பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த  பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ​ரோஹன  இன்றிலிருந்து (9)  புத்தாண்டு நிறைவடையும் வரை இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

இன்று (8) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வழமையாக புத்தாண்டு காலப்பகுதிகளில் குறிப்பாக  ஏப்ரல் 10ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையான  10 நாட்களில் தான் ஒவ்வொரு வருடமும் அதிக வாகன விபத்துகளும் இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் எனத் தெரிவித்த அவர், கடந்தாண்டு புத்தாண்டு காலப்பகுதியில் 135 பேர் உயிரிழந்துள்ளதுடன், 750 பேர்  காயமடைந்துள்ளனரென்றும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .