Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 06 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தேவையில்லையென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு ஆலோசனை வழங்கியதாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே, சற்றுமுன்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர், இடமாற்றம் தொடர்பான விவகாரமொன்றுக்காக, ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதியன்று, தான் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதிலும், அது தவிர்ந்த அதாவது, ஒக்டோபர் மாதம் முதல், தான் அந்தப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தேவையில்லையென, ஒவ்வொரு தவணைக் கூட்டத்தின் போதும் தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக, பூஜித் தெரிவித்தார்.
அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கபில வைத்தியரத்னவே, தனக்கு ஒவ்வொரு தவணையின் போதும் இந்த அறிவித்தலை விடுத்ததாகவும், அவர் கூறினார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமையவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்ததாக, பூஜித் ஜயசுந்தர கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
46 minute ago