2025 ஜூன் 18, புதன்கிழமை

பிரதமருடனான கலந்துரையாடல் வெற்றி

Editorial   / 2020 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில், இன்று (2) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன், இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக, கொழும்பு துறைமுக தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், கொழும்பு துறைமுகத்​தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிசங்கங்களின் 14 பிரதிநிதிகள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்திருந்தாலும் இதுதொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .