2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘பிரதமர் அரசமைப்பை மீறமாட்டார்’

Editorial   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அரசமைப்பை மீறினாலும் பிரதமர் அவ்வாறு செய்யமாட்டாரெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  நன்றாக கல்வி கற்றவர் என்பதால் அவர் அரசமைப்பை மீறிச் செயற்படமாட்டாரென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது உறுப்பினர்கள் 7 பேர் சுயாதீனமாகச் செயற்படுவதாக அறிவித்துள்ள நிலையில், அரசமைப்பின் 30 பேருக்கே அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பை மீறிச் செயற்பட மாட்டர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .